search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் தற்கொலை"

    • இவான் ஜோஸ்வா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
    • மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் சேலையூரை அடுத்த திருவஞ்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பென்னிவர்ட். அவருடைய மகன் இவான் ஜோஸ்வா (வயது 17). சேலையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக கட்டாயமாக்கப்பட்டுள்ள ஜே.இ.இ. நுழைவுத்தேர்வும் எழுதி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் தந்தை பென்வர்ட் வேலைக்கு சென்று விட்ட நிலையில், அவருடைய மனைவி தோழியை பார்ப்பதாக சென்று விட்டார். மகன் இவான் ஜோஸ்வா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    மாலையில் வீடு திரும்பிய அவரது பெற்றோர் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டதால், கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பின்பக்கம் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் இவான்ஜோஸ்வா தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவரின் சாவு குறித்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 24-ந்தேதி வெளியான நிலையில் இவான் ஜோஸ்வா அதில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

    • போலீசார் விரைந்து வந்து மிதின்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    • போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரல்வாய்மொழி:

    கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் சத்யம் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் ராயகிரியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் மிதின்குமார் (வயது 19) என்பவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.

    நேற்றிரவு நண்பர்களுடன் பேசி விட்டு மிதின்குமார் தனது அறைக்கு சென்றார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. நண்பர்கள் சென்று பார்த்தபோது மிதின்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தது. அதன்பேரில் மிதின்குமாரின் தந்தை மணிகண்டன் கல்லூரிக்கு விரைந்து வந்தார். சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மிதின்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் மிதின்குமார் சொந்த ஊரில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அந்த பெண் கடந்த 2 நாட்களாக அவரிடம் பேசாததால் மன வேதனையடைந்து தற்கொலை செய்ததாகவும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சஞ்சய் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆனந்தா பிரிஜ் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சஞ்சய் (வயது 23). இவர் சேலம் அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பகுதி நேர வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற சஞ்சய் ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். பின்னர் வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்த போது சஞ்சய் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அவர்கள் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது தாய் கொடுத்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து சஞ்சய் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து தேர்வுக்கு தயாராகும் வகையில் கடுமையான பயிற்சி அளித்து வருகிறார்கள்.
    • ஆடை குறைபாட்டை மற்ற மாணவர்கள் கேலி செய்ததால் மனமுடைந்த மாணவர் செல்வபிரகாஷ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காளவாசல் கலைஞர் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 50). இவரது மனைவி லட்சுமி (48). கதிர்வேல் அருகே உள்ள ரைஸ் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு கோகிலா என்ற மகளும், செல்வபிரகாஷ் என்ற மகனும் இருந்தனர். இதில் மகள் கோகிலாவுக்கு திருமணமாகி மம்சாபுரம் பகுதியில் தனது கணவருடன் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்.

    செல்வபிரகாஷ் கீழராஜகுலராமன் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து தேர்வுக்கு தயாராகும் வகையில் கடுமையான பயிற்சி அளித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று காலை பெற்றோரிடம் கூறி விட்டு வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற செல்வபிரகாஷ் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். ஆனால் அவர் பள்ளி முடிந்து சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

    இதனால் பதட்டம் அடைந்த உறவினர்கள் மகள் கோகிலா வீடு உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று தேடினர். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கதிர்வேல் தற்போது குடியிருக்கும் வீட்டின் அருகே புதிதாக வீடு கட்ட கொட்டகை அமைத்துள்ளார். அங்கு சென்று பார்த்த போது, செல்வபிரகாஷ், சால்வையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறித்துடித்தனர். பின்னர் இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் மாணவர் செல்வபிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன, பள்ளியில் ஆசிரியர்கள் திட்டினார்களா, இல்லை சகமாணவர்கள் கேலி செய்தார்களா அல்லது தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

    முதல்கட்ட விசாரணையில் ஆடை குறைபாட்டை மற்ற மாணவர்கள் கேலி செய்ததால் மனமுடைந்த மாணவர் செல்வபிரகாஷ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மனமுடைந்த மாணவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் அங்குள்ள கல்லூரியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டார்.

    இந்த விளையாட்டுகளில் அதிக அளவில் பணத்தை கட்டி இழந்தார். விளையாட்டு மோகம் காரணமாக லோன் ஆப் போன்றவற்றில் கடன் வாங்கி பணத்தை கட்டினார்.

    லோன் ஆப் மூலம் பெற்ற கடன் தொகை ரூ.3 லட்சத்தை திருப்பி செலுத்திய பிறகும் அவர்கள் தொல்லை கொடுக்க தொடங்கினர்.

    அதனால் மனமுடைந்த மாணவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாணவரின் தற்கொலைக்கு காரணமான லோன் ஆப் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது பெற்றோர்கள் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று மாலை நீண்ட நேரம் பப்ஜி கேம் விளையாடியதை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது
    • தற்கொலை சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கத்தில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர், தினமும் நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார்.

    நேற்று மாலை நீண்ட நேரம் பப்ஜி கேம் விளையாடியதை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த மாணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவரை தாய் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சக மாணவர்கள் இதனை பார்த்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள தெற்கு செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எட்டு ராஜன். இவரது மகன் சீனு (வயது 19).

    இவர் நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேல திடியூரில் செயல்பட்டு வரும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் படித்து வந்தார். இதற்காக அங்கு உள்ள கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது அறையில் விஷம் குடித்து சீனு மயங்கி கிடந்தார். சக மாணவர்கள் இதனை பார்த்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக கல்லூரி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மாணவனை மீட்டு பாளை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சீனு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிகிலேஷ் நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
    • கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகில் உள்ள பழைய சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் சுகந்தகுமார்(42). இவர் சவுதியில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், நிகிலேஷ்(17) , பாலையா(15) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    நிகிலேஷ் நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

    நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அவரது தாய் கதவை திறந்து பார்த்தபோது தனது மகன் இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாயிடம் செயின் தொலைந்தது குறித்து எப்படி தெரிவிப்பது என்று மாணவன் புலம்பியதாக கூறப்படுகிறது

    பரமத்திவேலூர்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே மஞ்சகன்னி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ். இவரது மகன் விஜயன் (18). இவர் நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விடுதியில் தங்கி சிவில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று இரவு 10.30 மணிக்கு அறையில் இருந்து வெளியே வந்த விஜயன் 3-வது மாடியில் உள்ள வாயில் அருகில் உட்கார்ந்து கொண்டு செல்போனில் மெசேஜ் செய்து கொண்டிருந்தார்.

    இன்று காலை 6.30 மணிக்கு பிரேம் ஆனந்த் என்ற மாணவன் படிப்பதற்காக 3-வது மாடி படி அருகே சென்றபோது விஜயன் அங்கிருந்த அறை ஒன்றில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    அதிர்ச்சியடைந்த பிரேம் ஆனந்த் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்லூரி நிர்வாகத்தினர் இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவன் தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்து போன மாணவர் நேற்று இரவு 11:30 மணி முதல் 12.30 மணி வரை அசோக் என்பவரிடம் தனது அம்மா வாங்கி கொடுத்த செயின் தொலைந்து விட்டதாக வருத்தமாக தெரிவித்துள்ளார்.

    மேலும் தாயிடம் செயின் தொலைந்தது குறித்து எப்படி தெரிவிப்பது என்று புலம்பியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நண்பர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஆண்ட்ரூஸ் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் அப்பர் சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் ராபர்ட். இவரது மகன் ஆண்ட்ரூஸ் (வயது 20) தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சிலநாட்களாக இரவு நேரத்தில் வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இதனை அறிந்த தாய் கண்டித்துள்ளார்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் நண்பர்களிடம் செல்போன் மூலம் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேகம் அடைந்த நண்பர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஆண்ட்ரூஸ் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆண்ட்ரூஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குருநாத் ஆன்லைனில் லோன் வாங்கி இருப்பதும் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
    • போலீசார் குருநாத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு சேவியர்புரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதரன். இவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் குருநாத் (வயது 21), நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தக்கலை போலீசார் குருநாத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பரிசோதனை செய்வதற்காக போலீஸ் நிலையம் எடுத்துச்சென்று ஆய்வு செய்தனர்.

    இதில், குருநாத் ஆன்லைனில் லோன் வாங்கி இருப்பதும் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பல்வேறு ஆன்லைன் செயலிகளில் இருந்து லோன் வாங்கியுள்ள அவர், அதை பலமுறை திருப்பி அளித்தும் உள்ளார். ஆனால் தாங்கள் இன்னமும் வட்டி கட்ட வேண்டி உள்ளது என்று தொடர்ந்து பல்வேறு ஆன்லைன் எண்களில் இருந்து அவருக்கு நிர்பந்தம் வந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஒரு கட்டத்தில் நிர்பந்தம் மிரட்டல் ஆக மாறியதால், குருநாத் வாட்ஸ் அப்பில் ஆன்லைன் மோசடிக்காரர்களிடம் வாய்விட்டு கெஞ்சியுள்ளார். தன்னால் இதற்கு மேல் முடியாது என்றும், நிறைய பணம் கொடுத்து விட்டேன் என்றும், இதற்கு மேல் என்னை நீங்கள் நிர்பந்தப்படுத்தினால் என் வாழ்க்கையை முடித்துக்கொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என்றும் அவர் அதில் கூறியிருப்பதாக தெரிகிறது.

    ஆனால் அவரது இந்த நடவடிக்கையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட மோசடி கும்பல், குருநாத்தின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவர் நிர்வாணமாக இருப்பது போன்று சித்தரித்து அவருக்கே அனுப்பி உள்ளது. உடனடியாக நாங்கள் சொல்லும் பணத்தை கட்டா விட்டால் இந்த புகைப்படத்தை இன்டர்நெட்டில் பரவ விடுவதோடு உனது உறவினர்கள் உனது தாய், தந்தை அனைவருக்கும் அனுப்பி வைப்போம் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் தான் குருநாத் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக குருநாத்தின் தந்தை ஸ்ரீதரன், ஆன்லைன் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து தனது மகனுடைய சாவுக்கு காரணமான மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளித்துள்ளார்.

    • ஆனந்த் சுரேஷ் மன வேதனையில் இருந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி ராணி அண்ணா நகர் சந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்சுரேஷ் (21), இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.

    இந்த நிலையில் பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை ஆனந்த்சுரேஷ் காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் சமீப காலமாக ஆனந்த்சுரேசிடம் பேசாமால் ஒதுங்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்த் சுரேஷ் மன வேதனையில் இருந்தார்.

    இந்தநிலையில் நேற்றிரவு வீட்டில் தூங்க சென்ற ஆனந்த்சுரேஷ் இன்று காலை வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால்அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது.

    இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×